தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் காலியிடங்களில், சட்டவிரோதமாக கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகீர் :
தமிழகத்தில் நீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அவற்றின் சுத்தத்தன்மையை உறுதி செய்யவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் டேங்கர் லாரிகளை கொண்டு, சட்டவிரோதமாக நீர்நிலைகளில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து உத்தரவிட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்நிலைகள் மற்றும் காலியிடங்களில் டேங்கர் லாரி மூலமாகவோ அல்லது தனியாகவோ கழிவு நீரை சட்டவிரோதமாக வெளியேற்றினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
ட்விட்டரில் 90 சதவீத இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்., Gap விடாமல் ஆப்பு வைக்கும் எலான் மஸ்க்!!
இதுபோக, அனுமதி இல்லாமல் கழிவு நீரை வெளியேற்றிய நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு, சீல் வைத்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.