தமிழகத்தில், குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்.1ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
EPFO சந்தாதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,,ஊதிய உச்சவரம்பு அதிகரிக்க வாய்ப்பு!!
இதன் அடிப்படையில் சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் வட மற்றும் வட உள் மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அக்டோபர் 9ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.