தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மூலம் இளைஞர்கள், ஆட்டோ டிரைவர் உட்பட 32 பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதன் காரணமாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தமிழ்நாடு அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (நவம்பர் 9) உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில் ” அதிர்ஷ்டத்திற்கான ஆன்லைன் விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும். ஆனால் ரம்மி, போக்கர் உள்ளிட்ட திறமைக்கான விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுகிறது.” என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த ரம்மி விளையாட்டை விளையாட வயது, நேரம் உள்ளிட்ட விதிகளை தமிழ்நாடு அரசே உருவாக்கி கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.