இந்தியாவில், இலவச மற்றும் கட்டாயக் குழந்தைக் கல்விச் சட்டத்தின் கீழ், எந்த ஒரு பள்ளியையும் அங்கீகாரம் பெறாமல் நிறுவவோ நடத்தவோ கூடாது. அவ்வாறு நடத்தினால், அது சட்டத்திற்கு புறம்பானதாகும். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு எதிராக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் இயங்கவில்லை என்பதற்கான சான்றிதழை இயக்குனரகத்திடம் அளிக்க வேண்டும் எனவும், அதனை வரும் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு, சமர்ப்பிக்க தவறினால் அந்த பள்ளிக்கு எதிராக ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதனை கட்டாமல் போனால், ஒவ்வொரு நாளும் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.