தமிழக அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, விளையாட்டு துறை போன்றவற்றிலும் சாதிக்க அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் மற்றும் பரிசு வழங்கும் விழாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய பாகிஸ்தான்…, கிரிக்கெட் வாரியம் (PCB) செய்த அதிர்ச்சி சம்பவம்!!
அதாவது இனி வரும் நாட்களில் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் மாணவர்களின் PET வகுப்பை சேர்த்து அவர்களே பாடம் நடத்தக் கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் முடிந்தால் உங்களது வகுப்புகளை மாணவர்களுக்காக விளையாட அனுமதியுங்கள் என கோரிக்கையும் வைத்துள்ளார். இவர் இந்த விழாவில் மாணவர்களுக்காக பேசியது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.