தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் நெற்பயிர்கள் பலவும் நீரில் மூழ்கி அழுகி விட்டதால் அதற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கனமழையால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடந்து கொண்டுள்ளது. சரியான கணக்கெடுப்புக்கு பின் சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தருவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
தமிழகத்தில் இந்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!