சமீபத்தில் மிக்ஜாம் புயலானது, தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாதிப்பில் இருந்து, பொது மக்கள் மீள்வதற்காக அரசு பல்வேறு வகையில் இருந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தமிழகத்தின் புயல் மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த 9 மாத குழந்தை முதல் 15 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கு, சுவாசப் பாதையை பெருமளவுக்கு பாதிக்கும் ரூபெல்லா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்க, ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.