தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்ததும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திரும்ப வழங்கப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன் தமிழக கூட்டுறவு அமைச்சர் ஐ. பெரியசாமி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தீபாவளி முடிந்ததும் ஒரு வாரத்தில், இந்தக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படும் என உறுதி அளித்தார். இந்த நிலையில், மகளிர் சுய உதவி குழு கடன் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். அதாவது, மகளிர் சுய உதவி குழு மூலம் ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
ரேஷன் கார்டுதாரர்கள் குழப்பம் – இந்த மாதத்திற்கான பொருட்கள் கட்? அரசின் விளக்கத்தால் பயனர்கள் ஷாக்!!
தொடர்ந்து, இந்த கடன் உதவியை பெற்று பெண்கள் பயனடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதுபோக, இன்னும் ஒரு வாரத்தில், மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என்றும் உறுதியளித்தார். இதனால் பெண்கள், அதீத மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.