தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் “கலைஞர் மகளிர் திட்டம், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்காக அண்மையில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இதில் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்ததில் 7.35 லட்சம் பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் முன்னதாக தேர்வு செய்யப்பட்ட 1.065 கோடி குடும்ப தலைவிகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இம்மாத உரிமை தொகையை இன்று (நவம்பர் 10) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.