தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தின், மேல்முறையீடு விண்ணப்பங்கள் கடந்த வாரம் வரை வரவேற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடிக்கடி மேல்முறையீடு செய்யவும், உரிமை தொகை பெறுபவர்கள் தகுதியானவர்களா? என்பதை கண்டறியவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் எம்.பி. முருகையன் திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது “”கலைஞர் மகளிர் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரி, எங்களின் பிரச்சினைகளை கேட்காமல், என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே அறிவுறுத்துகிறார். அவரது போக்கு ஊழியர்களுக்கு விரோதமாக இருப்பதால், உரிமைத் தொகை பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இன்று (அக்டோபர் 26) மாலை 04.45 மணிக்கு அனைத்து அதிகாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறோம்.” என கூறியுள்ளார்.
உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!