தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரியும் ஒரு சில துறை ஊழியர்களுக்கு, ஓய்வு பெறும் வயதில் முரண்பாடு இருப்பதாக புகார் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரி முதல்வராக பணிபுரிபவர்களுக்கு மட்டும் 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன் கூறுகையில், ”உயர்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் ஓய்வு பெறும் வயது 60 அல்லது 62 என நிர்ணயிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
அதிரடியாக வெளியான அஜித்தின் ”விடாமுயற்சி” பட அப்டேட்., குஷியில் ரசிகர்கள்!!