தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் குமரகுருபரன் அவர்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரின் குறைகளையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கும் விதமாக அரசாணையை, தற்போது செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள், பணி மாறுதல், புதிய நியமனம் உள்ளிட்ட அனைத்துக்கும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
என் அப்பா சங்கியா?? உண்மையை உணர்த்திய ஐஸ்வர்யா., கண்கலங்கி ரஜினிகாந்த்., ரசிகர்கள் நெகிழ்ச்சி!!