தென்னிந்திய சினிமாவில் 90களில் வெளியான எக்கச்சக்க திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வந்தவர் தான் மன்சூர் அலிகான். இவர் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் இப்படத்தில் தன்னுடன் நடித்த த்ரிஷா குறித்து தரம் குறைவாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதையடுத்து இவர் மீது மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றம் இவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இப்படியான சூழ்நிலையில் மன்சூர் அலிகான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பேட்டி ஒன்றில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது பற்றி உங்கள் கருத்து என்னவென இவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் அவர் வந்தால் நான் என்ன பதிங்கிடனுமா என்ன??. தற்போது (G .O .A .T )என்ற படத்தில் தானே நடித்து வருகிறார். கோட் என்றால் ஆடு, ஆட்டை பிரியாணி போட்டு சாப்பிட்டு போயிட்டே இருப்பேன் என கூறி இருக்கிறார். இவரின் இந்த நக்கலான பதிவுக்கு விஜயின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.