தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் கூடிய விரைவில் தொடங்க இருப்பதால பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, டிட்டோ ஜாக் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இயக்கங்கள் ஆகியோர் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் காரணமாக பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆசிரியர் சங்கங்களின் நிதி செலவில்லாத கோரிக்கைகளை தேர்வு செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி உள்ளது. அதேபோல் போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் மற்றும் சங்கங்கள் பதிவு செய்யும் தகவல்களை கண்காணிக்கும் பணியை தொடங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., இதை செய்யலன்னா கார்டு ரத்து செய்யப்படுமா?? வெளியான அறிவிப்பு!!!