தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியராகவோ அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால், அடுத்த பதவி உயர்வு பெற சில ஆண்டுகள் தாமதமாகும். எனவே இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., இந்த மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.., வானிலை மையம் பகீர்!!!
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “2016 ஆம் ஆண்டு முதல் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களின் நியமனம் செல்லாது.” என உத்தரவிட்டுள்ளனர். அதன்படி சுமார் 1,040 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான தலைமை ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.