தமிழகத்தில் இந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு!!!

0
தமிழகத்தில் இந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்.

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் பணியிட மாற்ற உத்தரவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில் அண்மைக்காலமாக பணியிட மாற்ற அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


அதன்படி இந்த உத்தரவில்,

  • மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பி.ஆக வி.ஷியாமலா தேவி IPS,
  • சென்னை கொளத்தூர் துணை ஆணையராக பாண்டியராஜன் IPS,
  • சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.ஆக வி.சரவணகுமார் IPS,
  • சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.ஆக சாமிநாதன் IPS,
  • சென்னை சிஐடி எஸ்.பி.ஆக எஸ்.சக்திவேல் IPS,
  • சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.ஆக சாமிநாதன் IPS,
  • மதுரையில் இருந்து நெல்லை துணை ஆணையராக அனிதா IPS,
  • திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக எம்.ராஜராஜன் IPS,
  • திருப்பூர் எஸ்.பி.ஆக அபிஷேக் குப்தா IPS,
  • சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.ஆக பாகெர்லா கல்யாண் IPS,
  • திருவள்ளூர் எஸ்.பி.ஆக சீனிவாச பெருமாள் IPS ஆகிய அதிகாரிகளுக்கு பணியிட மாற்ற நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here