பணிப்பெண்ணை சித்திரவதை  செய்த MLA  குடும்பம்..  கோரிக்கையுடன் போலீசில் ஆஜர்!!

0
பணிப்பெண்ணை சித்திரவதை  செய்த MLA  குடும்பம்..  கோரிக்கையுடன் போலீசில் ஆஜர்!!
திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகனுடைய வீட்டில் 18 வயதுள்ள பெண் வீட்டு  வேலை செய்துவந்துள்ளார்.  ஆனால் அவர் சரியாக வேலை பார்க்கவில்லை என்பதற்காக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள்  அப்பெண்ணை  சூடு வைத்து பல கொடுமைகளை  செய்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் வெளிவந்த நிலையில் போலீசார்  எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இருவரும் போலீசுக்கு பயந்து தலைமறைவாகினர்.
அதன் பின்னர் தாங்கள் போலீசில் ஆஜராகுவதாகவும், தங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இருவர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன் ஜாமின் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று தலைமறைவாகி இருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோர் தனிப்படை போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here