தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை வரும் ஜூன் 6 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய கல்வி ஆண்டை எதிர்நோக்கி மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இருந்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, மாணவர்கள் புதிய வகுப்புக்களுக்கு தயாரானாலும் பள்ளிக் கல்வித் துறையானது அவர்களுக்கான ஆசிரியர்களைத் தயார்படுத்தவில்லை. தமிழகத்தில், 38 ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில், மேல்நிலை பள்ளிகளில் 670, உயர்நிலை பள்ளிகளில் 435 என 1105 என மொத்தமாக 1105 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இன்றளவும் நியமிக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அரசு ஊழியர்களே.., அகவிலைப்படியை தொடர்ந்து இந்த சலுகையும் இருக்கு.., வெளியான அறிவிப்பு!!
இன்னும் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்க 6 நாட்களே உள்ள நிலையில், தலைமை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் மூத்த முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிகமாக பொறுப்பு வகிப்பார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தலைமை பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து விரைவில் காலியாக உள்ள ஆசிரியர்களை பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.