இந்தியாவின் முன்னணி வீரர்களான பி வி சிந்து, லக்ஷ்யா சென், சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி உள்ளிட்டோர் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில், பி வி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து ஏமாற்றம் தந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால், லக்ஷ்யா சென், சாய்னா நேவால், சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். இன்று நடைபெற்ற போட்டியில், லக்ஷ்யா சென், சீனாவின் லீயை 21-17. 21-15 என எளிதில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
IPL வரலாற்றில் இன்று மறக்க முடியாத முக்கிய நாள்.., என்னனு தெரிஞ்சுக்கணுமா?? முழு விவரம் இதோ!!!
இவரை போல, இந்தியாவின் ஜார்ஜ் சீனாவின் வெங்கை 21-11, 21-19 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஆனால், சாய்னா நேவால், சிராக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி இந்தோனேஷியா வீரர்களிடம் தோல்வியை தழுவி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டனர்.