தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி பெறாதவர்களே – உங்களுக்கு கடைசி வாய்ப்பு! கூட்டுறவு துறை உறுதி!!

0
தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி பெறாதவர்களே - உங்களுக்கு கடைசி வாய்ப்பு! கூட்டுறவு துறை உறுதி!!
தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி பெறாதவர்களே - உங்களுக்கு கடைசி வாய்ப்பு! கூட்டுறவு துறை உறுதி!!

தமிழகத்தில், 5 சவரனுக்கு உட்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்று தள்ளுபடி, ஆகாதவர்களுக்கு கடைசி வாய்ப்பு குறித்த அறிவிப்பை, அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்டுள்ளார்.

நகை கடன் தள்ளுபடி :

தமிழகத்தில், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் பெற்றவர்களுக்கு, தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், இதில் உள்ள உண்மை தன்மையை ஆராய்ந்து தகுதி வாய்ந்த பாதி நபர்களுக்கு மட்டுமே இந்த இந்த நகை கடன் தள்ளுபடி கொடுக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுகுறித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, தற்போது வரை ரூ. 3,969 கோடி பயிர்க்கடன் வழங்க பட்டிருப்பதாகவும், 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது போக, மாநிலம் முழுவதும் தற்போது வரை சுமார் 1 லட்சம் பேர், நகை கடன் தள்ளுபடிக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால், அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.

சிலிண்டர் மானியத்தை Check பண்ணிருக்கீங்களா? இது இவ்ளோ ஈஸியா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!

கடைசி வாய்ப்பாக, அவர்கள் இந்த உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், இதுவரை தள்ளுபடி பெறாதவர்கள் அதற்கான, வழிமுறைகளை முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here