ஜூலியஸ் பேர் செஸ்.., தோல்வி அடைந்த இந்திய வீரர்.., கடைசி ஆட்டத்தில் ஏற்பட்ட சோகம்!!

0
ஜூலியஸ் பேர் செஸ்.., தோல்வி அடைந்த இந்திய வீரர்.., கடைசி ஆட்டத்தில் ஏற்பட்ட சோகம்!!

ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடருக்கான இறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஜூலியஸ் பேர் செஸ்

இணையதளம் வாயிலாக நடைபெற்று வரும் ஜூலியஸ் பேர் கோப்பைக்கான செஸ் போட்டியில் 16 பேர் பங்கேற்ற நிலையில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா காலிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார். அதன் பிறகு நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி மற்றும் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்கள் இருவருக்கு இடையிலான பைனல் மேட்ச் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டரரை வீழ்த்தி ஜூலியஸ் பேர் செஸ் கோப்பைக்கான பட்டத்தை தட்டிச் சென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

1045 ரன் 23 செஞ்சுரி குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்.., வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்!!

இறுதி போட்டியில் விளையாடியதன் மூலம் இவர்கள் இருவரும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மெல்ட்வாட்டர் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக செஸ் போட்டி தொடருக்கான தரவரிசை பட்டியலில் நார்வே நாட்டு வீரர் கார்ல்சன் முதலிடத்திலும், இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2 ஆம் இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here