தமிழகத்தில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் உட்பட 40 க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
தொடரும் கனமழை.., தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு., கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!
இந்நிலையில் நேற்று (நவம்பர் 8) இலங்கை சிறையில் இருந்த நான்கு தமிழக மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து இன்று (நவம்பர் 9) 38 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.