தொடரும் கனமழை.., தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு., கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

0
தொடரும் கனமழை.., தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு., கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!
தொடரும் கனமழை.., தென்பெண்ணை ஆற்றில் நீர் திறப்பு., கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில்  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள ஆற்றின் ன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆற்றில் இருந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து 2,270 கன அடியாக உயர்ந்து காணப்படுகிறது.

TNPSC குரூப் 1 தேர்வர்களே., இதற்கு அப்ளை பண்ணிட்டிங்களா?  இந்த சரியான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

மேலும் அந்த அணையில் மதகுகள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அணையில் இருந்து நீரை திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ மற்றும் கால்நடைகளை இறங்க வைக்கவோ கூடாது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here