தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வணிகம் மற்றும் தொழில்துறை மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து பீக் அவர்ஸ் ஆன மாலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மின் கட்டணம் கூடுதலாக 15 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. இதுபோக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து கட்டண உயர்வு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் எட்டாண்டுகளுக்கு பிறகு ஒரே அடியாக மின் கட்டணங்களை உயர்த்துவதால் சிறு குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். எனவே கனரக தொழில்களுக்கு உரிய ‘பீக் அவர்ஸ்’ நடைமுறையை சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.