தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பண்டிகை உள்ளிட்ட தினங்கள் மட்டுமல்லாமல் கனமழை, வெள்ளம் போன்ற காரணங்களாலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அப்படியாக வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக கருதப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாளை (பிப்ரவரி 3) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக கருதப்படும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதேபோல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வுக்கு இடையூறு இல்லாமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.