நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வசதிகளை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 77 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆன்லைன் வசதியை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி இதுவரை 21 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக பலோட் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரத்து 809 பயனாளிகளில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 606 பயனாளிகள் புதுப்பித்தல் பணிகளில் ஆர்வம் காட்டி உள்ளனர். அதேபோல் 2ஆம் இடத்தில் கான்கேர் மாவட்டமும், 3ஆம் இடத்தில் தாம்தாரி மாவட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலை நாள்., மாணவர்கள் ஷாக்!!!