தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டி.எல்.எட்.,டிப்ளமோ தேர்வு குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
டி.எல்.எட்.,டிப்ளமோ தேர்வு:
தமிழகத்தில் ஏராளமான தொடக்க கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, இரண்டு ஆண்டு தொடக்கக் கல்வி இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சியை பெறலாம். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான டி.எல்.எட்., டிப்ளமோ தேர்வின் அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானதை அடுத்து தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் டி.எல்.எட்., டிப்ளமோ தேர்வு குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று பிற்பகல் 12:00 மணி முதல் www.dge.tn.gov.in/ தளத்தில் நகலை டவுன்லோடு செய்யலாம், இதை அடுத்து மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்வர்கள் உரிய விண்ணப்பத்தை அதிகாரபூர்வ தளத்தில் டவுன்லோட் செய்து, தாங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மறுகூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு 205 ரூபாயும், மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு, 505 ரூபாயும் என கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.