ரயில் பயணிகளுக்கு இதுவரை இல்லாத சிறப்பு திட்டம் ஒன்றை, ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் மூலம் பயணிகளுக்கு அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலேயே இனி எல்லாம் கிடைக்கும்.
முக்கிய திட்டம் :
பெரும்பாலான பொதுமக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் முக்கியமான சேவைகளில் ஒன்று ரயில் போக்குவரத்து. ரயில்வே துறை மூலம், பயணிகளுக்கு நாள்தோறும் புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கட்டணமில்லா ரயில் சேவை என்ற புதிய திட்டத்தை IRCTC நிர்வாகம் தொடங்கியது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதை அடுத்து, கட்டணமில்லா வருவாய் திட்டம் என்பதன் கீழ் CSMT மும்பை மற்றும் நாக்பூர் நிலையங்களில் “சக்கரங்களில் உணவகம் ” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம், பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் சக்கர உணவகங்களை தொடங்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
பொதுமக்களுக்கு அடித்த ஜாக்பாட் – குடும்பங்களுக்கு ரூ.3500 சிறப்பு உதவித்தொகை! மாநில அரசு அதிரடி!!
விரைவில் அந்த முக்கிய நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த சூப்பர் திட்டம், பயணிகளிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.