நெருங்கி வரும் இயற்கை பேரிடர் காலங்களில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 3500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறப்பு உதவித்தொகை :
வெள்ளம், புயல் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அரசின் சார்பாக சிறப்பு உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். இது போன்ற நெருக்கடி காலங்களில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்க நிவாரண பொருட்களுடன் சேர்த்து, ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அந்த வகையில் பீகார் மாநிலத்தில், விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ஏற்படும் வறட்சியை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ரூ. 3500 சிறப்பு உதவித்தொகை வழங்க, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 11 வறட்சி மாவட்டங்களில் உள்ள 96 தொகுதிகளின் கீழ் 937 பஞ்சாயத்து மற்றும் 7841 வருவாய் கிராமங்களில் வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டவ் ஷாம்பு பயன்படுத்துபவரா நீங்கள்.,, உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!
நெருங்கி வரும் சாத் பண்டிகையை கவனத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், அதற்கு உரிய நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.