தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 109 பேர் பலி!!

0
Corona
Corona

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதுவரை 2,63,222 பேர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 4,241 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்று ஒரே நாளில் 5,800 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 2,02,283 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 122 பரிசோதனை மையங்களில் 27,33,295 மாதிரிகள் இதுவரை சோதிக்கப்பட்டு உள்ளன.

ஆகஸ்ட் 5 முதல் திறக்கப்படும் ஜிம்கள், யோகா வகுப்புகள் – வழிமுறைகள் வெளியீடு!!

corona rate in TN
corona rate in TN

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.99% ஆக அதிகரித்து உள்ளது. 1,59,435 ஆண்கள், 1,03,760 பெண்கள், 27 திருநங்கைகளுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here