கொரோனா ஊரடங்கு பூட்டுதலின் போது புலப்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர்ந்து சேவை செய்து வருகிறார் சோனு சூட் இவர் இப்பொழுது மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக மாறிவருகிறார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
பெண் ஒருவருக்கு சோனு சூட் கட்டி தரும் வீடு
ஜல்பைகுரி பகுதியில் பெண் ஒருவர் தன கணவனை இழந்து தனது பிள்ளைக்கு உணவளிக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவரது குடும்பம் வானிலையில் இருப்பதாகவும் வாலிபர் ஒருவர் வீடியோ ஒன்றை டிவீட்டரில் வெளியிட்டருந்தார். அதை பார்த்த சோனு சூட் ரக்ஷா பந்தனை முன்னிட்டு அந்த பெண்ணுக்கு புதிய வீட்டைக் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார். ஜல்பைகுரி பகுதியில் மழையால் வீடு இழந்த பெண்ணுக்கு உதவுவதாக அவர் கூறியுள்ளார். மழையால் அவர்களின் துயரம் மேலும் அதிகரித்துவிட்டது. நீங்கள்தான் அந்த பெண்ணுக்கு கடைசி நம்பிக்கை. உங்களால் முடிந்தால் அந்த குடும்பத்தைக் காப்பாற்றுங்கள் சோனு சார் என்று அந்த நபர் நடிகர் சோனு சூட்டை டேக் செய்து ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த டிவீட்டிற்கு, ‘’இந்த ரக்ஷா பந்தன் நாளில் எங்கள் சகோதரிக்கு உதவுவோம். அவருக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டுவோம்’’ என சோனு சூட் பதிலளித்துள்ளார்.
சமீப காலமாக இவருடைய நற்செயல்களுக்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்துகள், ரயில் வசதி மற்றும் விமான வசதிகளை செய்து கொடுத்துக்கொண்டு வருகிறார் நடிகர் சோனு சூட்.