தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை 1,895 கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு :
தமிழகம் முழுவதும் உள்ள, அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியருக்கு காலிப் பணியிடங்கள் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு கலை கல்லூரிகளில் உள்ள 1895 காலி பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து பேசிய அவர், இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதில் முதல் கட்டமாக, அரசு வெளியிட்ட இட ஒதுக்கீட்டின் படி 76 மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
புதிய அவதாரத்தை கையில் எடுக்கும் ஜித்தன் ரமேஷ்.., சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பாரா??
கடந்த ஆட்சியில் இது குறித்த அதிகாரம் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. இது குறித்த புகார்களை தடுக்கவே, தற்போது அரசின் வாயிலாக இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செயல்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார்.