இந்திய அணியுடன் 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இரு அணிகளும் T20 உலக கோப்பை தொடரை இழந்ததால் இளம் வீரர்களோடு களமிறங்கி உள்ளதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில், இந்திய அணியுடன் மோதவுள்ள தொடர்கள் எப்போதுமே சவாலாகத் தான் இருக்கும். தற்போது இலங்கை பிரிமியர் லீக் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் வீரர்களுக்கு இந்திய மைதானத்தின் விளையாடிய அனுபவம் இல்லை.
48 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா…, உலக கோப்பையை எதிர் நோக்கி ஓர் பயணம்!!
ஆனால் இலங்கை மைதானங்களை விட இந்திய மைதானம் எங்களுக்கு சாதகமாக தான் இருக்கும். இதனால் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை போட்டிக்கு பயிற்சியாக இந்த தொடர்கள் அமையும் என கூறியுள்ளார்.