தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 1) மாலை நாமக்கல்லில் நடைபெற்ற எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நல சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
அதன்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதனை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
வணக்கம் வைக்காத விசித்திரா.., ஷூட்டிங் ஸ்பாட்டில் வச்சு செஞ்ச பிரபல காமெடி நடிகர்.., என்ன நடந்தது?