தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம், ஹீரோயின் என ரவுண்டு கட்டி வந்தவர் தான் விசித்திரா. இவர் நடித்த முத்து திரைப்படம் இப்பொழுது ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. இப்படி சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விசித்திரா திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இதனை தொடர்ந்து தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் , பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஒரு வணக்கம் வைக்காததால் ஒரு காமெடி நடிகர் சண்டையிட்ட சம்பவம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய பெரிய குடும்பம் படத்தின் ஷூட்டிங் போது நடிகர் கவுண்ட மணியுடன் சில காட்சிகள் விசித்திரா நடித்திருந்தார். அப்போது ரவிக்குமார் விசித்திராவை கவுண்டமணியிடம் வணக்கம் சொல்ல சொன்னாராம்.ஆனால் நான் காலையில் வந்தவுடனே சொல்லி விட்டேன் என்று கூற மறுபடியும் கூறுங்கள் என்று இயக்குனர் கட்டாயம் படுத்தியுள்ளார். எனவே மீண்டும் கவுண்டமணிக்கு விசித்திரா வணக்கம் வைத்தாராம். இதை ஏன் ரவி செய்தார் என்று பார்த்தால், கவுண்டமணி இந்த திமிரு பிடித்த பெண்ணுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதாவது எப்பயோ ஒருமுறை விசித்ரா கவுண்டமணியிடம் வணக்கம் வைக்கவில்லையாம், அதற்காக தான் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம்.