வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் வலுப்பெற்று வரும் 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் தென்கிழக்கு வங்கக் கடலில் கரையை கடக்கும் என கணிக்க பட்டிருந்த நிலையில், இப்போது ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மிக்ஜம் புயல் இப்போது ஆந்திராவை நோக்கி நகர்வதால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.