தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ,காரணமாக சில தினங்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ,மழைப்பொழிவு ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஏராளமான குடியிருப்புகளில் தேங்கி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் இம்மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வருகிற திங்கட்கிழமை (டிச.11) முதல் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்று முதல் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.