தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உரிமை தொகை பெறுபவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 570 க்கும் மேற்பட்ட மகளிர் உரிமை தொகை பெறுபவர்கள், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையை இழக்க வாய்ப்புள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஐபிஎல் தொடரை மிஞ்சும் புதிய லீக்? பிசிசிஐ போடும்மாஸ்டர் பிளான்…, முழு விவரம் உள்ளே!