உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் சாமியை தரிசிக்க பல ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். அதன்படி பக்தர்களுக்காக சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமும், இலவச தரிசன டிக்கெட் நேரடியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது ஏப்ரல் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிட உள்ளது. இதனால் பக்தர்கள் https://tirupatibalaji.ap. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
IND vs ENG 1st Test: ஹைதராபாத் மைதானத்தில் யார் கை ஓங்கி இருக்கும்…, பிட்ச் ரிப்போர்ட் இதோ!!