அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில்ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கல்லூரி படிப்பை முடித்து புதுசாக வேலைக்கு செல்பவருக்கு அச்சூழ்நிலை சற்று கடினமாகவே இருக்கும். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
உடை
உடை தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும். எனவே அலுவலகத்திற்கு செல்லும்போது டீசெண்டாக உடை அணிய வேண்டும். மற்றவர் முகம் சுழிக்காத வண்ணம் நம் ஆடை அணிய வேண்டும். “ஆள் பாதி ஆடை பாதி” என்பது போல ஆடை தான் ஒருவரை பற்றி தீர்மானிக்கும்.
விடுமுறை
அடிக்கடி விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் விடுமுறை எடுப்பதால் அன்றைய நாளுடைய பயிற்சியை நீங்க இழக்கின்றிர்கள். இதனால் உங்கள் நன்மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. இரவு பகலாக உழைக்க வேண்டியதில்லை ஆனால் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பது போதுமானது
சோர்வு
வேலை நேரத்தில் அதிகமாக சோர்வை முகத்தில் வெளிப்படுத்த கூடாது ஏனெனில் நீங்கள் இப்படி தான் என்று அடுத்தவர் தீர்மானிக்க வாய்ப்புள்ளது. எனவே சோர்வை வெளிக்காட்டாமல் முடிந்தவரை சிரித்து கொண்டிருந்தால் உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்யலாம்.
அலுவலக நண்பர்கள்
புதுசாக அலுவலகத்தில் சேர்த்தவுடன் அலுவலக நண்பர்களுடன் நன்கு பழகி கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்களிடம் கேட்டு தெளிவாக்கி கொள்ளலாம். நம் கருத்துகளை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது வார்த்தைகளை தெளிவாக வெளிப்படுத்தவும். முக்கியமாக அடுத்தவரை பற்றி குறை கூறாமல் இருப்பது நல்லது.
தவறுகள்
புதிதாக அலுவலகத்தில் சேர்ந்ததால் வேலையில் சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் கண்டிப்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்து விடுங்கள். செய்த தவறை ஒப்புக்கொள்வது மிகவும் நல்ல பண்பாகும். இதில் முக்கியமாக அன்றைக்குரிய வேலையை அன்றைக்கே முடித்து வருவதால் வேலைப்பளு அதிகம் தெரியாமல் இருக்கும். இந்த முறைகளையெல்லாம் நாம் பின்பற்றும்போது கண்டிப்பாக நாம் நம் பணியில் வெற்றி பெறலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |