கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு, 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த செயலுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த விசாரணையை, வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான சூப்பர் டூப்பர் நியூஸ்!!!