இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் ஐடி துறையில் பணிபுரிய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கேற்றார் போல் இப்போது இந்தியாவிலும் பல ஐடி நிறுவனங்கள் உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு மதுரையில் “Happiest Minds” நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த நிறுவனத்தை இன்னும் விரிவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கூடுதலான IT ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி கிட்டத்தட்ட 250 பேரை புதிதாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.