தமிழக மக்களே.., இனி மின் கட்டணம் செலுத்த இது தான் நடைமுறை.., TANGEDCO அறிவிப்பு!!!

0
தமிழக மின்வாரிய துறையில் மின் கட்டணம் செலுத்தவும், மின் தொடர்பான புகார்களை அளிக்கவும் பொதுமக்களின் வசதிக்கேற்ப பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் TANGEDCO என்ற மொபைல் செயலியை மின்வாரியத்துறை அறிமுகபடுத்தியது.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் தங்கள் பகுதியில் ஏற்படும் மின் பழுது தொடர்பான புகார்களை அறிவிக்கலாம் என தெரிவித்திருந்தனர். தற்போது இதற்கான சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மின்வாரிய துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இந்த மொபைல் செயலியை அமல்படுத்த மின்வாரிய துறை திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here