நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழகத்திலும் அதனை தொடர்ந்து கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.