நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறையை முன்கூட்டியே வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருவதை நாம் அறிவோம். இந்த நிலையில் தற்போது டெல்லி அரசு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது டெல்லியில் உள்ள பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு முடிந்த பிறகு மே 11ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு 51 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோடை விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
லோக்சபா தேர்தல் எதிரொலி.., இந்த 2 நாட்கள் பொது விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!