இன்றைய காலத்தில் பெருபாலானோர் தொழில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் கடனை பெற்று வருகின்றனர். இந்த கடனை பெறுவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. கடனை உரிய முறையில் திருப்பி செலுத்தியதற்கு பிறகு அல்லது ப்ரீகுளோஸர் செய்த பிறகு தனிநபர் கடன் முழுவதும் முடிக்கப்பட்டது என பலரும் விட்டு விடுகின்றனர். ஆனால் கடனை திருப்பி செலுத்திய பிறகும் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.
2,000 ஊழியர்கள் திடீரென பணி நீக்கம்.., காரணம் இது தான்.., பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!
அதாவது,
- தனிநபர் கடன் முழுவதுமாக அடைக்கப்பட்டுவிட்டதா? என சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் அபராதம் உள்ளிட்டவை இருந்தால் கடன் மூடப்படாமல் வட்டி அதிகரித்து கொண்டே இருக்கும்.
- கடனை பெறுவதற்காக சமர்ப்பித்த ஆவணங்களை திருப்பி பெற வேண்டும்.
- பின்னர் கடன் முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் அல்லது நோ அப்ஜக்ஷன் சான்றிதழை வங்கியில் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.