மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் இப்போது தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலுக்கான 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு மார்ச் 30-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.