கேரள மாநிலம் கொச்சியில் ஒரு வீட்டில் திருட நுழைந்த நபர் அது ராணுவ வீரர் வீடு என தெரிந்ததும், எதையும் திருடாமல், தெரியாம வந்துட்டேன்., என்னை மன்னிச்சுடுங்க.. என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெரியாம வந்துட்டேன்..!
கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று இரவு 5 கடைகளில் நுழைந்த திருடன் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றான். இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்தது. கடைகளில் கொள்ளையடித்து விட்டு ஒரு ராணுவ வீரரின் வீட்டிலும் அவன் நுழைந்து உள்ளான்.
“அன்புள்ள திருடனுக்கு” பள்ளியில் திருடிச் சென்றவருக்கு ஆசிரியர்களின் உருக்கமான கடிதம்..!
தேசபக்தி திருடன்..!
தான் நுழைந்தது ராணுவ வீரர் வீடு என தெரிந்ததும் அந்த வீட்டில் சுவற்றில், ‘இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்பதை தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து விட்டேன், என்னை மன்னிச்சுடுங்க, அவரது தொப்பியை வைத்து தான் நான் அதை கண்டுபிடித்தேன்’ என எழுதி விட்டு சென்று உள்ளான். அந்த வீட்டின் உரிமையாளர் ஆன முன்னாள் ராணுவ வீரர் ஐசக் வெளிநாடு சென்றிருந்த போது இந்த் சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீட்டில் இருந்த எந்த பொருளையும் திருடாதே அவன் பிரிட்ஜ்-இல் இருந்த ஒரு மதுபான பாட்டிலில் ஒரு பெக் மட்டும் குடித்து விட்டு சென்றுள்ளான்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |