கொரோனா வைரசுக்கு எதிராக அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய மூன்று அறிகுறிகள்..!
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் திவீரம் அடைந்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையின் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. அறிகுறிகள் இல்லாமலேயே பல பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி மணம்-சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி போன்றவை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் சேர்த்து கொரோனாவுக்கான அறிகுறிகளாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் நோயாளிக்கு தகுந்தாற்போல் அறிகுறிகளும், நோயின் தாக்கமும் மாறுபடும்எனவும் கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் இந்த அறிகுறிகள் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.