இந்திய ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற முன்னணி உள்ளூர் T20 தொடர்களில் IPL தொடரும் ஒன்றாகும். கணக்கில்லாத ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இந்த தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி RCB அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்நிலையில் இத்தொடர் குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., தேர்தலுக்கு முன் வெளியான சூப்பர் அறிவிப்பு!!!
அதாவது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்தலாமா? என பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் அட்டவணை இன்று (மார்ச் 16) வெளியானதும் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. வரும் 22 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7 வரை முதற்கட்டமாக 21 போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.